விருந்தும் மருந்தும் மூன்று நாள்!-உண்மையான விளக்கம் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, March 23, 2026

விருந்தும் மருந்தும் மூன்று நாள்!-உண்மையான விளக்கம்

 விருந்தும் மருந்தும் மூன்று நாள்!-உண்மையான விளக்கம்


விருந்தும் மருந்தும் மூன்று நாள்!


இந்த பழமொழியை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். முன்னோர்கள் எதற்காக இவ்வாறு கூறினார்கள் ? இதற்கான ஒரு சில விளக்கங்களை இப் பதிவில் பார்க்கலாம்..


உறவினர், நண்பர், மிக மிக நெருங்கிய உறவினர், என யார் வீட்டிற்கும் நாம் விருந்தோம்பலுக்கு சென்றால் மூன்று நாட்களுக்கு மேல் தங்கினால் நமக்கு மரியாதை இருக்காது என்று அப்போதே நம் முன்னோர்கள் கூறி விட்டார்கள்.


அதைப் போல உடல் நிலை சரியில்லை என்றால் அந்த நாட்களில் வீட்டிலேயே பாட்டி வைத்தியம் முறையை தான் கையாண்டார்கள். வீட்டிலியே இருக்கும் மூலிகை பொருட்களையும் மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் போன்ற பொருட்களையும் உடல்நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு உகந்தவாறு சேர்த்து மருந்துகளை தயாரித்து மூன்று நாட்களுக்கு மூன்று வேளை வீதம் என கொடுப்பார்கள். பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மூன்று நாட்களில் நன்றாக குணமாகிவிடும். அப்படி ஒருவேளை மூன்று நாள் ஆகியும் சரியாக வில்லை என்றால் தான் மருத்துவரை நாடுவார்கள். முக்கால் வாசி பேருக்கு மூன்று நாட்களிலேயே குணமாகி விடும். ஆகவே தான், விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று கூறினார்கள்.


இன்னொரு விளக்கத்தில் சித்த மருத்துவர்களின் கருத்துப் படி...


ஞாயிறு, செவ்வாய், வியாழன் - இவை மூன்றும் சூரிய நாட்கள்.


திங்கள், புதன், வெள்ளி - இவை மூன்றும் சந்திர நாட்கள்.


சனி - பொது நாள்.


சந்திர நாட்களில் விருந்தும், சூரிய நாட்களில் மருந்தும் எடுத்து கொள்ள வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் வலியுறுத்தினர்.


சந்திர நாட்களில் விருந்துண்டால் ஜீரணமாவது எளிது. அதைப் போல மருந்து உட்கொள்பவர்கள் சூரியன் நாட்களாகிய ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் இந்த மூன்று நாட்களில் எதாவது ஒரு நாளில் மருந்தை எடுத்து கொள்ள ஆரம்பிக்கலாம் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.


இதைத் தான் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment