வங்கியில் பணி புரிய 400 பணியிடங்களுக்கு ரூ.48,400 முதல் ரூ.85,920 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கியான இந்த வங்கியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officers (LBO) –
JMGS I) - 400
இதில் தமிழ்நாட்டில் மொத்தம் 260 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இப்பணியிடங்கள் எஸ்சி பிரிவில் - 39, எஸ்டி பிரிவில் - 19, ஒபிசி பிரிவில் - 70, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் - 26, பொது பிரிவில் - 106 என மொத்தம் 260 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 இடங்கள் உள்ளன.
வயது வரம்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவி மேனேஜர் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் அடிப்படை சம்பளமாக ரூ.48,400 முதல் அதிகபடியாக ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் தேர்வு, மொழி திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு 140 கேள்விகளுடன் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மொழி திறன் தேர்வு நடைபெறும். அதனைத்தொடர்ந்து, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்வு மையம் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.iob.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.175 செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
31.05.2025
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க :
https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf
No comments:
Post a Comment