வங்கியில் பணிபுரிய 2600 பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Circle Based Officers பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 2,600 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதில் சென்னை வட்டத்தின் கீழ் தமிழ் மொழி பிரிவில் 120 காலிப்பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் காலியாக உள்ள Circle Based Officers பதவிக்கான 2,600 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
வட்டம் சார்ந்த அதிகாரிகள் (Circle Based Officers)- 2,600
நாட்டில் பல்லேறு வட்டங்களில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் சென்னை வட்டத்தில் தமிழ் மொழி பிரிவில் மட்டும் 120 காலிப்பணியிடங்கள் உள்ளன. அவை எஸ்சி - 18, எஸ்டி - 9, ஒபிசி - 32, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 32, பொது பிரிவில் - 49 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
எஸ்பிஐ வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு 30.04.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். அதிகபடியாக 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகள் - 10 முதல் 15 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
எஸ்பிஐ வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் மூலம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் மற்றும் சிஏ ஆகியவை முடித்திருக்க வேண்டும். 30.04.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 2 வருடங்கள் அனுபவம் தேவை. மேலும், அந்தந்த வட்டங்களுக்கான மொழி தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.48,480 அடிப்படை சம்பளம் ஆகும். இப்பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கீரின், நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://sbi.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொருளாதார பிரிவு, பொது பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அறிவிப்பை பார்க்க
https://sbi.co.in/documents/77530/52947104/CBO+advt+final.pdf/b4d458c6-020e-d611-1814-479c5bad24ac?t=1746728206892
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்
29.05.2025
ஆன்லைன் தேர்வு கால் லெட்டர்
ஜூலை 2025
ஆன்லைன் தேர்வு
ஜூலை 2025
எஸ்பிஐ வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment