வங்கியில் பணி புரிய 418 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 1,05,280 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, February 5, 2026

வங்கியில் பணி புரிய 418 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 1,05,280 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 வங்கியில் பணி புரிய 418 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 1,05,280 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு


பேங்க் ஆஃப் பரோடா-வில் ஐடி துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு. மொத்தம் 418 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பிப்ரவரி 19-ம் தேதி வரை பெறப்படுகிறது. பல்வேறு ஐடி பிரிவுகளில் பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு இது. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.


இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான இடத்தில் பேங்க் ஆஃப் பரோடா (BOB) உள்ளது. இவ்வங்கியின் தகவல் தொழில்நுட்பம் (IT) பிரிவில் உள்ள 418 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. அதிகாரி, மேனேஜர், சீனியர் மேனேஜர் என ஐடியின் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பாக உள்ளது.


பதவியின் பெயர்


அதிகாரி, மேனேஜர், சீனியர் மேனேஜர்


காலிப்பணியிடங்கள் :418


இணையதளம்


https://bankofbaroda.bank.in


பணியின் விவரங்கள்


டெவலப்பர் புல் சாக் ஜாவா, கிளவுடு இன்ஜினியர், ஏஐ இன்ஜினியர், நெட்வொர்க் நிர்வாகி, சர்வர் நிர்வாகி, டேட்டா பேஸ் அட்மினிஸ்ரேட்டர், டேட்டா சயிண்டிஸ்ட், டேட்டா இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் நிரப்பப்படுகிறது.


அதிகாரி, மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் ஆகிய அளவுகளில் பதவிகள் உள்ளன.


மொத்த 418 காலிப்பணியிடங்களில் பொதுப்பிரிவு - 196, ஒபிசி - 115, பொதுப்பிரிவு EWS - 36, எஸ்சி - 58, எஸ்டி - 13 என நிரப்பப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.


என்ன வயது வரை இருக்கலாம்?


அதிகாரி பதவிக்கு 22 முதல் 32 வரை இருக்கலாம்.


மேனேஜர் பதவிக்கு 24 முதல் 34 வரை இருக்கலாம்.


சீனியர் மேனேஜர் பதவிக்கு 27 முதல் 37 வரை இருக்கலாம்.

வயது வரம்பில் மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு பின்பற்றப்படும்.


கல்வித்தகுதி என்ன?


பரோடா வங்கியில் இருக்கும் பணியிடங்களுக்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலை பொறியியல்/தொழில்நுட்பம் படித்தவர்கள், முதுகலை கணினி பயன்பாடு படித்தவர்கள் (B.E/ B.Tech./ M. Tech / M.E./ MCA) விண்ணப்பிக்கலாம். அந்தந்த ஐடி பிரிவிற்கு ஏற்ப திறன் சார்ந்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


அதிகாரி பதவிக்கு குறைந்தபட்சம் 1 ஆண்டு, மேனேஜர் பதவிக்கு 3 ஆண்டுகள் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.


தேர்வு முறை என்ன?


வங்கியின் மூலம் நேரடி ஆட்சேர்ப்பிற்கான அனைத்து கட்ட நடைமுறையும் பின்பற்றப்படும். முதலின் விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தகுதிக்கு ஏற்ப தெரிவு செய்யப்படும். அவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சைக்கோமெட்ரிக் சோதனை, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.


காரணிகள், ஆங்கிலம், நுண்ணறிவு, நிபுணத்துவ அறிவு ஆகியவற்றில் தலா 15 கேள்விகள் என்ற விதம் 225 மதிப்பெண்களுக்கு நடைபெறும். சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும்.


சம்பளம்


அதிகாரி - ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும்.


மேனேஜர் - ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.


சீனியர் மேனேஜர் - ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


ஐடி துறை சாரந்த கல்வித்தகுதியும், அனுபவமும் பெற்றவர்கள் https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ESM/DESM மற்றும் பெண்கள் ரூ.175 செலுத்த வேண்டும்.


முக்கிய நாட்கள்


விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்


30.01.2026


விண்ணப்பிக்க கடைசி என நிர்ணயிக்கப்பட்ட நாள்


19.02.2026


பரோடா வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு உரிய கல்வித்தகுதி, திறன், அனுபவம் கொண்டவர்கள் இந்த வாய்ப்பிற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். தேர்வு தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment