வங்கியில் பணிபுரிய 2050 பணியிடங்களுக்கு 48,480 முதல் 85,920 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் உள்ள வட்டார அதிகாரி பதவியில் உள்ள 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்று (ஜன்வரி 29) வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
2026-ம் ஆண்டில் எஸ்பிஐ வங்கி வட்டார அதிகாரி (SBI Circle Based Officer) பதவியில் 2,050 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://sbi.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2026
அமைப்பின் பெயர்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பதவியின் பெயர்:
வட்டார அதிகாரி (Circle Based Officer)
காலிப்பணியிடங்கள் :2,050
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
இணையதளம்
https://sbi.bank.in/
அறிவிப்பு
எஸ்பிஐ வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு 2026
விண்ணப்பிக்க கடைசி நாள்
18.02.2026
தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் வட்டார அதிகாரி பதவி நிரப்பப்படுகிறது. இப்பதவிக்கு உள்ளூர் மொழி தெரிந்திருப்பது கட்டாயமாகும். அதன்படி, தமிழ் மொழிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை வட்டாரத்தில் மொத்தம் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் எஸ்சி - 24, எஸ்டி - 12, ஒபிசி - 44, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 16, பொதுப்பிரிவினர் - 69 என நிரப்பப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு
2025 டிசம்பர் 31-ம் தேதியின்படி, விண்ணப்பதார்கள் 21 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது. அதே போன்று, அதிகபடியாக 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. 31.12.2004 முன்னரும், 01.01.1996 பின்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி
இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த இரண்டு பட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர் (CA), செலவு கணக்காளர் (Cost Accountant) ஆகியவற்றை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாநிலத்திற்கான மொழியை அறிந்தவரா இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழ் மொழியை எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். 10 அல்லது 12-ம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அனுபவம்
பட்டப்படிப்பிற்கு பின்னர் ஏதேனும் ஒரு வணிக வங்கி அல்லது கிராமப்புற வங்கியில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
ஸ்டேட் பேங்க் வேலைக்கு 4 கட்ட தேர்வு முறை உள்ளன. ஆன்லைன் தேர்வு, தெரிவு செய்தல், நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழி தேர்வு ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வு 120 மதிப்பெண்கள் கொள்குறி வகையிலும், 50 மதிப்பெண்கள் விரிவாக விடையளிக்கும் வகையிலும் அமையும். கணினி வழியில் தேர்வு நடைபெறும். கொள்குறி வகையில் (Objective Test) நடைபெறும் தேர்வு ஆங்கிலம், வங்கி குறித்த பொது அறிவு, பொது விழிப்புணர்வு, கணினி நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.
இதில் தேர்வாகும் நபர்களின் விவரங்கள் தெரிவு குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதியாக மொழி தகுதிப் பெற்ற பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்.
சம்பளம்
இப்பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.48,480 ஆகும். அதிகபடியாக ரூ.48,480 - 85,920 என்ற விதம் சம்பள அளவு நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணிக்கு https://sbi.bank.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்தி நிறைவு செய்ய வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்
18.02.2026
தேர்வு தேதி
பின்னர் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் நபர்கள் அவர்களுக்கான உரிய இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும்போது அல்லது கட்டணம் செலுத்தும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், 022-22820427 என்ற எண்ணிற்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

No comments:
Post a Comment