ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.46,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 21, 2026

ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.46,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.46,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் பதவியில் உள்ள 572 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.45,000 சம்பளம் இப்பதவிக்கு வழங்கப்படுகிறது.


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு பணி தேடுபவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு இதுதான். ரிசர்வ் வங்கியில் உள்ள 572 அலுவலக உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 4 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 9 பணியிடங்கள் உள்ளன.


அமைப்பின் பெயர்


ரிசர்வ் வங்கி


பதவியின் பெயர்


அலுவலக உதவியாளர்


காலிப்பணியிடங்கள் 572



இணையதளம்


https://opportunities.rbi.org.in/


விண்ணப்பிக்க கடைசி நாள்:பிப்ரவரி 4


பணியின் விவரங்கள்


ரிசர்வ் வங்கியில் தேசிய அளவில் உள்ள 572 அலுவலக உதவியாளர் (RBI Office Attendant 2026) பதவிகள் உள்ளன.


 சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட 14 நகரங்களில் இப்பதவி நிரப்பப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 9 காலிப்பணியிடங்கள் உள்ளன. அவை ஒபிசி - 8, பொது - 1 என நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


இப்பணியிடங்களுக்கு 01.01.2026 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 18 முதல் 25 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.2001 முன்னரும், 01.01.2008 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. இதுவே எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 30 வயது வரையும், ஒபிசி பிரிவினருக்கு 28 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 - 15 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது. கணவரை இழந்த பெண்கள், கணவரை பிரிந்து வாழும் பெண்களுக்கு 35 வயது வரை தளர்வு உள்ளது. இதில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 40 வயது வரை தளர்வு உள்ளது.


கல்வித்தகுதி


01.01.2026 தேதியிபடி, விண்ணப்பதார்கள் உரிய பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க இயலாது.


மேலும், அந்தந்த மாநிலத்திற்கான மொழியை அறிந்திருப்பவராக இருகக் வேண்டும். எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருப்பது அவசியம்.


சம்பள விவரம்


அலுவலக உதவியாளர் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.24,250 ஆகும். ரூ.24,250 முதல் அதிகபடியாக ரூ.53,330 சம்பளமாக வழங்கப்படும். தேர்வாகும் நபர்களுக்கு தோராயமாக மாதம் ரூ.46,029 சம்பளமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் தேர்வு கொள்குறி வகையில் காரணி, பொது ஆங்கிலம், பொது அறிவு, நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படிஅயில் 120 கேள்விகள் கொண்டு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 90 நிமிடங்கள் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வாகும் நபர்களுக்கு மொழி திறன் தகுதித் தேர்வு நடைபெறும். இதில் தகுதிப் பெற்றால் மட்டுமே அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியும்.


தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்/கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தர்மபுரி ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதார்களின் எண்ணிக்கையை பொறுத்துத் தேர்வு மையம் முடிவெடுக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் https://opportunities.rbi.org.in/ என்ற ரிசர்வ் வங்கியின் ஆட்சேர்ப்பு இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். கட்டணமாக ரூ.450 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.


முக்கிய நாட்கள்


விவரம் தேதிகள்


விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்


15.01.2026


விண்ணப்பிக்க கடைசி நாள்


04.02.2026


விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த அவகாசம்


15.01.2026 - 04.02.2026


தேர்வு தேதி


28.02.2026 - 01.03.2026


ரிசர்வ் வங்கியின் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் தங்களின் விவரங்களை அளித்து விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் இதர விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment