இந்து சமய அறநிலையத்துறையில் ரூ 36,700 முதல் ரூ 1,16,200 வரை ஊதியத்தில் 19 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கோயிலில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திருக்கோயிலில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் டிசம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள பிரபல கோயிலில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் திருக்கோயிலில் நேரடி நியமனத்தில் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், தமிழ் புலவர், உதவி மின்பணியாளர், பாரா, காவலர் ஆகிய பதவிகளில் ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர்
உதவி பொறியாளர் -1
இளநிலை உதவியாளர்- 2
சீட்டு விற்பனையாளர்- 3
தமிழ் புலவர்- 1
உதவி மின்பணியாளர்- 2
பாரா -6
குருக்கள் அர்ச்சகர் உபகோயில்- 1
காவலர் -1
உதவி பரிச்சாரகர் -2
மொத்தம் - 19
வயது வரம்பு
திருக்கோயிலில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயதைப் பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதே போன்று, 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
உதவி பொறியாளர் பதவிக்கு சிவிலி பொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பிரிவு ஏ மற்றும் பி-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சிவில் பொறியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சீட்டு விற்பனையாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு தட்டச்சு தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் புலவர் பதவிக்கு ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.lit அல்லது BA/MA அல்லது M.Lit ஆகியவற்றை கல்வித்தகுதியான பெற்றிருக்க வேண்டும். திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உதவி மின்பணியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் மின்/மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பாரா பதவிக்கு தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
குருக்கள் அர்ச்சகர் பதவிக்கு தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
காவலர் பதவிக்கு தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
உதவி பரிச்சாராகர் பதவிக்கு தமிழில் படிக்க எழுத தெரிந்திருப்பது அவசியம் மற்றும் கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
உதவி பொறியாளர் பதவிக்கு நிலை 35 கீழ் ரூ.36,700 - 1,16,200 வரை வழங்கப்படும்.
இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர் மற்றும் தமிழ் புலவர் பதவிகளுக்கு நிலை 22 கீழ் ரூ.18,500 முதல் 58,600
உதவி மின்பணியாளர் பதவிக்கு நிலை 18 கீழ் ரூ.16,600 - 52,400
பாரா பதவிக்கு நிலை 17 கீழ் ரூ.15,900 - 50,400
குருக்கள் அர்ச்சகர் உபகோயில் மற்றும் காவலர் பதவிகளுக்கு நிலை 12 கீழ் ரூ.11,600 - 36,800
உதவி பரிச்சாரகர் பதவிக்கு நிலை 10 கீழ் ரூ.10,000 - 31,500
விண்ணப்பிப்பது எப்படி?
கபாலீசுவரர் திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ என்ற கோயிலின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய தகுதிச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
மேலும், ரூ.75 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை நேரடியான அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப உள்ளிட்ட பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
கல்வி நிலையத்தினால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.
முக்கிய நாட்கள்
தொடக்கப்பட்ட தேதி
27.11.2025
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்
28.12.2025 பிற்பகல் 5.45 மணி வரை
நேர்காணல்
பின்னர் அறிவிக்கப்படும்.
திருக்கோயிலில் உள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். ஆர்வமுள்ள இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment