சுவையான நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
5 (சிறியது)நெல்லிக்காய்
1 கப்அரிசி
1பச்சை மிளகாய்
1/2 ஸ்பூன்கடுகு
1/2 ஸ்பூன்உளுந்தம்பருபபு
1ஸ்பூன்கடலைப்பருப்பு
2 ஸ்பூன் நிலக்கடலை
கருவேப்பிலை
2 ஸ்பூன்நல்லெண்ணெய்
உப்பு-தேவையான அளவு
1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
செய்முறை
அரிசியை நன்கு கழுவி 2.5 கப் தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும் (பெரிய நெல்லிக்காயாக இருந்தால் 3 சிறியதாக இருந்தால் 5 எடுத்துக் கொள்ளவும்).
வெறும் வாணலியில் நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி கொள்ளவும்.
சூடான வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் 1/2 ஸ்பூன் கடுகு,1/2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு,1/2 ஸ்பூன் மஞ்சள், 2 ஸ்பூன் தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை,ஆகியவற்றை வறுத்து அதனுடன் 1 பச்சை மிளகாயை நறுக்கி சேர்க்கவும்.
தாளிசத்துடன் துருவிய நெல்லிக்காய்,கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
இந்த கலவையில் வடித்த சாதத்தை கொட்டி நன்கு கிளறவும்.
சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்

No comments:
Post a Comment