அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை எப்போது? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, August 27, 2025

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை எப்போது?

 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை எப்போது?


அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.


6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


பள்ளி கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள தேதியைவிட முன்கூட்டியே தேர்வு தொடங்கினாலும், ஏற்கனவே செப்டம்பர் 26-ந்தேதிக்குள் தேர்வு முடியும் என தெரிவித்தபடியே நிறைவு பெறுகிறது.


 அந்தவகையில், காலாண்டு தேர்வு விடுமுறையும், கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டபடி, அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment