வங்கியில் 4500 பயிற்சி பணியிடங்களுக்கு ரூ15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, June 10, 2025

வங்கியில் 4500 பயிற்சி பணியிடங்களுக்கு ரூ15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 வங்கியில் 4500 பயிற்சி பணியிடங்களுக்கு ரூ15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


பொதுத்துறை வங்கியான இந்திய மத்திய வங்கி (சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா) 2025-26-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 4,500 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. வங்கியில் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு இது அருமையான வாய்ப்பாக அமைகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். சென்ட்ரல் பேங்க் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.


சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நாடு முழுவதும் இருந்து 4,500 தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 202 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கொள்ளலாம்.


தொழிற்பயிற்சி விவரங்கள்


தொழிற்பயிற்சியாளர்கள் சட்டம், 1961 கீழ் மத்திய அரசின் நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பணிக்கான அனுபவத்தை பெறும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் இப்பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, 1 வருடம் வங்கி பணிக்கான தொழிற்பயிற்சி உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 2025-26-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இவை எஸ்சி - 688 , எஸ்டி - 382, ஒபிசி - 1036, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 450, பொதுப்பிரிவு - 1944 என நிரப்பப்படுகிறது.


இதில் தமிழ்நாட்டில் மட்டும் 202 பணியிடங்கள் உள்ளன. அவை எஸ்சி - 38 , எஸ்டி - 2, ஒபிசி - 54, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 20, பொதுப்பிரிவு - 88 என நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு


சென்ட்ரல் பேங்க் தொழிற்பயிற்சி இடங்களுக்கு 31.05.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.


கல்வித்தகுதி


தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.


தொழிற்பயிற்சி உதவித்தொகை


தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


வங்கியில் பயிற்சி பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வு நடத்தப்படும்.


ஆன்லைன் தேர்வு 8 தலைப்புகள் கொண்டு 100 கேள்விகளுடன் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தேர்வெழுத 60 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்படும். நெகட்டிங் மார்க்கிங் கிடையாது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உள்ளூர் மொழி திறன் தேர்வு நடத்தப்படும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கு தமிழ் மொழியை படிக்க, எழுத, பேச மற்றும் புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும்.


இறுதியாக கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 12 மாதங்கள் வங்கி பணிக்கான பயிற்சி அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


ஆர்வமுள்ளவர்கள்

 https://nats.education.gov.in/ 


என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.


 தொடர்ந்து, “Central Bank of India” என இருக்கும் தொழிற்பயிற்சி அறிவிப்பை கிளிக் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


 இதற்கான அறிவிப்பை

 https://www.centralbankofindia.co.in/ 


என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 


அறிவிப்பை பார்க்க 


https://www.centralbankofindia.co.in/sites/default/files/engagement-of-apprentices-central-bank-fy-2025-26.pdf


இதற்கான தேர்வு கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் ரூ.600 மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.400 செலுத்த வேண்டும். கூடுதலாக 18% வசூலிக்கப்படும்.


முக்கிய நாட்கள்

விவரம்



விண்ணப்பம் தொடக்கபப்ட்ட நாள்: 07.06.2025


விண்ணப்பிக்க கடைசி நாள்:

23.06.2025


விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்:


07.06.2025 முதல் 25.06.2025


ஆன்லைன் எழுத்துத்தேர்வு:


ஜூலை முதல் வாரம்


சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு அவரிகளில் கெரியரை தொடக்க நல்ல வாய்ப்பாக அமையும்.

No comments:

Post a Comment