மிகவும் பயனுள்ள 21 கிச்சன் டிப்ஸ் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 15, 2024

மிகவும் பயனுள்ள 21 கிச்சன் டிப்ஸ்

 மிகவும் பயனுள்ள 21  கிச்சன் டிப்ஸ்


*கடலைப்பருப்பு, துவரம்பருப்பு தலா ஒரு கப், நறுக்கிய வாழைப்பூ ஒரு கப், உப்பு, மிளகாய் சேர்த்து ஊறவைத்து கெட்டியாக அரைத்து உருண்டைகளாக்கி ஆவியில் வேகவைத்து குழம்புகளில் போட்டால் சுவையாக இருக்கும்.


* லெமன் ரைஸ், பொரியல் போன்றவற்றில் மிளகாய்க்கு பதிலாக இஞ்சியை தோல் நீக்கி துருவிச் சேர்த்தால் மணமாக இருக்கும். உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.


* வெங்காய ஊத்தப்பம் செய்யும் போது அது இரு புறமும் வெந்து இருந்தால் தான் சுவையாக இருக்கும். சீக்கிரம் ஜீரணமாகும். அதன் நடுப்பகுதியில் சிறு துளை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவாக வெந்து விடுவதுடன் சுவையும் ஜோராக இருக்கும்.


* வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றில் கூட்டு வைக்கும் போது தேங்காய் எண்ணெயில் தாளியுங்கள். அதிக ருசியாக இருக்கும்.


* கடலைப்பருப்பை வேகவைத்த உடன் பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சிறிது உப்பு எல்லாம் மிக்ஸியில் அரைத்து வேகவைத்த பருப்பில் பிசறி பிறகு தாளிக்க கடலைப்பருப்பு மசியல் மிகவும் சுவையாக இருக்கும்.


* பீட்ரூட்டை குக்கரில் வேகவைத்து கொண்டு பின்பு நறுக்கினால் சுலபமாக நறுக்கவரும். தோல் உரிந்து விடும்.


* மோர்க்குழம்பு தயார் செய்து இறக்கி வைக்கும் முன்பாக சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொஞ்ச நேரம் கழித்து இறக்கினால் குழம்பு சுவையாக இருக்கும்.


* பாட்டில் மூடியைத் திறக்க முடியாமல் இறுக்கமாக இருந்தால், ஈரத்துணியால் மூடியை இறுகப் பற்றிக் கொண்டு திருகினால் மூடியை சுலபமாக திறந்து விடலாம்.


* வெண்டைக்காயை ஃபிரிட்ஜில் வைக்கும்போது அதன் நுனி மற்றும் தலைப்பகுதியை வெட்டி வைத்தால் நீண்ட நாட்கள் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.


* எப்போது வடை அல்லது துவையல் செய்தாலும் வேப்பம் பூ சேர்த்து செய்தால் ருசியாக இருப்பதுடன் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் பூச்சி தொல்லையும் நீங்கும்.


* பொரியலில் தேங்காய்க்கு பதில் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து அரைத்து பொரியலின் கடைசியில் சேர்த்தால் மணமும், சுவையும் கூடுதலாக கிடைக்கும்.


* சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி வட்டவடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.


* இரவில் மீந்துபோன உளுந்துமாவு கொழுக் கட்டைகளை மறு நாள் காலை நன்கு உதிர்த்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளியுடன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி எடுத்தால் சுவையான கொழுக்கட்டை உப்புமா கிடைக்கும்.


* பச்சை கொத்தமல்லி இலை துவையல் அரைக்கும் போது மிளகாய்க்கு பதில் மிளகை வறுத்து அரைத்து விட மணம் மாறுதலாக இருப்பதுடன் சுவையும் கூடுதல்.


* இடியாப்பத்துக்கு மாவு பிசையும் போது அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேருங்கள். இடியாப்பம் அதிக மென்மையாக இருக்கும்.


* பச்சை பட்டாணி வேகவைக்கும் போது அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை தூவுங்கள். பட்டாணி சுவை அதிகமாக இருக்கும்.


* தோசை ஊற்றும் போது கல்லில் ஒட்டிக் கொண்டால், கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கல்லில் தேய்த்து விட்டு பிறகு ஊற்றினால் தோசை சரியாக வரும்.


* செம்பு பாத்திரங்களில் காய்கறிகளை வேகவைக்கக் கூடாது. அப்படி வேகவைப்பதினால் அவற்றிலுள்ள வைட்டமின் ‘சி’ சத்து அழிந்து விடும்.


* வாட்டர் பில்டரில் கொஞ்சம் துளசியைப் போட்டு விட்டால் தண்ணீர் மணமாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.


* சில்வர் பேப்பரில் சப்பாத்தி, புரோட்டாவை சுற்றிவைத்தால் வெகுநேரம் வரை சூடாக இருக்கும்.


* கோதுமை மாவை நன்கு சலித்து, சிறிதளவு டேபிள் சால்ட்டை சேர்த்து வைத்தால் வண்டுகள் வராது.

No comments:

Post a Comment