பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் 899 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மத்திய அரசு வேலை வாய்ப்பு..!
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் 899 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
பணியிடங்கள் விவரம்:
டிராஃப்ட்ஸ்மேன் (Draughtsman) - 42
இந்தி டைப்பிஸ்ட் (Hindi Typist) - 10
ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் (Store Keeper Technical - SKT) - 100
தகவல் தொடர்பு இயக்குநர் (Operator Communication) - 261
இயந்திர இயக்குநர் (Operator Excavating Machinery - OEM) ) - 207
எலக்ட்ரீஷியன் (Electrician) - 79
என மொத்தம் 899 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். டிராஃப்ட்ஸ்மேன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியலை ஒரு பாடமாக எடுத்து படித்து இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கட்டிடக்கலை அல்லது டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் துறையில் 2 ஆண்டு சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்) துறையில் 2 ஆண்டு தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்தத் தொழிலில் 1 ஆண்டு நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தி டைப்பிஸ்ட்:
12 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கணினியில் இந்தி மொழியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.
ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்:
பிளஸ் டூ தகுதியுடன் வாகனங்கள் மற்றும் பொறியியல் உபகரணங்கள் தொடர்பான Store Keeping பணிகள் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
எலக்ட்ரிஷியன்:
எலக்ட்ரிஷியன் பணிக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ அல்லது அதற்கு இணையான நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எலக்ட்ரீஷியன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், எலக்ட்ரீஷியனாக குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18-வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 20,200 முதல் வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடல் தகுதி, உடல் அளவீடு தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ 50 செலுத்த வேண்டும், எஸ்சி /எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
"www.bro.gov.in" என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து Commandant, GREF Centre, Dighi Camp, Pune- 411015 என்ற முகவரிக்கு தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வரும் 04.07.2026 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்த பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பை படிக்க
https://bro.gov.in/frontend/images/recruitments/recruitment_200526171410.pdf.pdf

No comments:
Post a Comment