பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 40 நிரந்தர பணியிடங்களுக்கு 24,500 முதல் ரூ.90 ஆயிரம் வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 18, 2025

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 40 நிரந்தர பணியிடங்களுக்கு 24,500 முதல் ரூ.90 ஆயிரம் வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!

 பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 40 நிரந்தர பணியிடங்களுக்கு 24,500 முதல் ரூ.90 ஆயிரம் வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!


பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான நிரந்தர பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் டிரைய்னி, டெக்னீஷியன் ஆகிய பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் முக்கிய நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் செயல்படுகிறது. அந்த வகையில், காசியாபாத்தில் உள்ள 49 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் நிரந்தமாக நிரப்பப்படுவதால் டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர் 


இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் டிரைய்னி- 22


டெக்னீஷியன் -27


மொத்தம் 49


இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் டிரைய்னி பதவியில்


 எலெக்ட்ரிக்கல் - 12


 கணினி அறிவியல் - 2


எலெக்ட்ரிக்கல் - 1


 மெக்கானிக்கல் - 7


 என நிரபப்படுகிறது.


டெக்னீஷியன் பதவியில்


 எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 15


 எலெக்ட்ரிஷியன் - 1


 பிட்டர் - 11 


என நிரபப்படுகிறது.


வயது வரம்பு


மத்திய அரசு நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிறைந்து இருக்க வேண்டும். அதிகபடியாக அக்டோபர் 1-ம் தேதியின்படி, 28 வயது வரை இருக்கலாம். ஒபிசி 3 வருடங்கள், எஸ்சி/ எஸ்டி 5 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10 வருடங்கள் தளர்வு வழங்கப்படும்.


கல்வித்தகுதி


இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் டிரைய்னி பதவிக்கு எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


டெக்னீஷியன் பதவிக்கு எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், எலெக்ட்ரிஷியன், பிட்டர் ஆகியவற்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதியில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுபவம் தேவையில்லை.


சம்பள விவரம்


இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் டிரைய்னி பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,500 முதல் அதிகபடியாக ரூ.90 ஆயிரம் வரை வழங்கப்படும்.


டெக்னீஷியன் பதவிக்கு ரூ.21,500 முதல் அதிகபடியாக ரூ.82,000 வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் கணினி வழி தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். தேர்விற்கான அட்மிட் கார்டு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பொது நுண்ணறிவில் 50 மதிப்பெண்கள், டெக்னிக்கல் நுண்ணறிவில் 100 மதிப்பெண்கள் இடம்பெறும். இதில் தேர்ச்சி இரண்டு பகுதிகளிலும் சேர்ந்து 35 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்டி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 30 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.


விண்ண்பபிக்கும் முறை


பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://bel-india.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு கட்டணமாக ரூ.500 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. தற்போது விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், அக்டோபர் 30 வரை விண்ணப்பிக்கலாம். பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்க


https://bel-india.in/wp-content/uploads/2025/10/English-Detail-Advt.pdf


முக்கிய நாட்கள்


விண்ணப்பிக்க கடைசி நாள்


 30.10.2025


கணினி வழி எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் மேலும் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு recruitmentgad@bel.co.in என்ற இமெயில் ஐடி அல்லது 0120-2814032/3746 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment