இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 127 பணியிடங்களுக்கு ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025-26 ஆண்டில் சிறப்பு அதிகாரிகளுக்கான பிரிவில் 127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வங்கியில் பணி வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக அமைந்துள்ளது. பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள ஏராளமான பணி வாய்ப்புகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் தொடங்கி பெறப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
IS Audit, சிவில், ஆர்க்கிடெக், எலெட்ரிக்கல், ஆட்டோமொபைல், பிரிண்ட்டிங், கருவூலம், கார்ப்ரேட் கிரெடிட், ரிஸ்க், தகவல் பாதுகாப்பு, மொபைல் ஆப்ஸ், டேட்டா சயின்டிஸ்ட், டேட்ட இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மொத்தம் 127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அவை எஸ்சி - 12, எஸ்டி - 3, ஒபிசி - 31, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 5, பொதுப் பிரிவு - 76 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறப்பு நிபுணர்களுக்கான பிரிவில் நிரப்பப்படும் இப்பணியிடங்களில் 01.09.2025 தேதியின்படி, மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபடியாக 35 வரையும், சீனியர் மேனேஜர் பதவிக்கு 30 முதல் 40 வயது வரையும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித்தகுதி
மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு எம்சிஏ, கணினி அறிவியலில் எம்.எஸ்சி அல்லது தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சைபர் பாதுகாப்பு, சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் ஆகியவற்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
எம்பிஏ, CFA/ CA/ PGDBA/ PGDB/ MMS உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு ஏற்ப அந்தந்த துறைகளுக்கான பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது தகுதியை பெற்றிருக்க வேண்டும். முழுமையான கல்வித்தகுதியை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
மேனேஜர் பதவிக்கு 2 முதல் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சீனியர் மேனேஜர் பதவிக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.
சம்பள விவரம்
பொதுத்துறை வங்கியில் உள்ள மேனேஜர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை என்ற விதம் சம்பளம் வழங்கப்படும். அதே போன்று, சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, தொழில்முறை அறிவு ஆகியவற்றில் அடிப்படையில் நடைபெறும்.
மொத்தம் 100 கேள்விகளுக்கு 2 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். ஆங்கிலத்தில் தேர்வு வினாத்தாள் அமையும். இத்தேர்வு கொள்குறி வகையில் அமையும். அதன்படி, கேள்விக்கான சரியான விடையை கொடுக்கப்பட்டு இருக்கும் பதில்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். இதில் நெகட்டிவ் மார்க்கிங் உள்ளது. தவறான பதிலுக்கு 1/4 அளவு மதிப்பெண் குறைக்கப்படும்.
இதில் தேர்ச்சி பெற 30% மதிப்பெண்கள் பெற வேண்டும். பொதுப்பிரிவில் 35% மதிப்பெண்கள் பெற வேண்டும். தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர அனைத்து உரிமைகளும் வங்கிக்கு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
வங்கி பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பிக்க தயாராக உள்ளவர்கள் https://www.iob.in/Careers என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும்.
புது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 12-ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பை பார்க்க
https://www.iob.in/upload/CEDocuments/iobLateral-Recruitement-Specialist-Officers-11092025.pdf
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்
12.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்
03.10.2025
எழுத்துத் தேர்வு
பின்னர் அறிவிக்கப்படும்.
நேர்காணல்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவிக்கப்படும்.
127 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வங்கியின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டதற்கான அழைப்பு கடிதம் இமெயில் மூலம் அனுப்பப்படும். அதில் தேர்வு நகரம் மற்றும் தேதி விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment