பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தில் மாதம் ரூ.65,000 ஊதியத்தில் 38 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் கீழ் தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் (CMGFP) 2025 கீழ் Green Fellows பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் கல்வி நிறுவனம் இத்திட்டத்தின் அறிவுசார் ஆலோசகராக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 38 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பசுமை தோழராக அறிவிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தில் தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்குதல், நிர்வாக செயல்முறைகளை மேம்படுத்தல் ஆகியவற்றில் இளம் நிபுணர்களின் ஆற்றலையும் திறமையையும் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாடு அரசின் 2025-ம் ஆண்டுக்கான முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தில் பசுமை தோழர் பதவிக்கான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் சார்ந்த பாடப்பிரிவுகளில் இளங்கலை/ முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ண்பபிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் 2 ஆண்டு காலத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் கீழ் தமிழ்நாடு அரசின் திட்டங்களில் பணியாற்றுவார்கள்.
முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் 2025-27
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசின் மேற்கொள்ளும் திட்டங்களில் இளைஞர்களின் சேவைகளையும், ஆற்றல் பங்களிப்பையும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்தில் 1 பசுமை தோழர் என 38 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் கல்வி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களில் பணியாற்றுவார்கள்.
குறிப்பாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கொள்கைகளில் பொதுமக்களை பங்கேற்பை உறுதிபடுத்துதல், மாவட்ட நிர்வாகத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்ப கருவிகளை உபயோகித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவார்கள். 2 வருடங்களுக்கு பசுமை தோழர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். பொதுப் பிரிவில் - 12 இடங்கள், பிசி பிரிவில் - 10 இடங்கள், பிசிஎம் பிரிவில் - 1, எம்பிசி பிரிவில் - 8 இடங்கள், எஸ்சி பிரிவில் - 5 இடங்கள், எஸ்சிஏ பிரிவில் - 1 இடம், எஸ்டி பிரிவில் 1 இடம் என 38 இடங்கள் உள்ளன.
பசுமை தோழர் தகுதிகள்
வாழ்க்கை அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் /மேலாண்மை, சூழலியல்/வனவியல்/வனவிலங்கு/பொது கொள்கை/சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
மேலும், இளங்கலை பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் 2 ஆண்டுகள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதார்கள் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் அதிகபடியாக் 35 வயது வரை இருக்கலாம்.
விண்ணப்பதார்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாயம் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்
பசுமை தோழராக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.65,000 ஊதியமாக வழங்கப்படும். மேலும், போக்குவரத்து செலவிற்கு ரூ.10,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்
https://environment.tn.gov.in/
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் அடிப்படையில் கூகுள் படிவம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அறிவிப்பை பார்க்க இங்கே
https://environment.tn.gov.in/assets/whatsnew/d67c9619d76660f7d5f47c3ba1982201.pdf
முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 2235 7597 என்ற தொலைபேசி எண்ணிற்கும், cmgfpau@gmail.com இமெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்
No comments:
Post a Comment