இந்து சமய அறநிலையத்துறையில் ரூ 58,100 ஊதியத்தில் வேலை வாய்ப்பு
இந்து சமய அறநிலையத் துறையில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 6 பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்து மதத்தை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பினை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 1.07.2024 தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
அதன்படி ஆதி திராவிடர் (அருந்ததியர்), ஆதி திராவிட, பழங்குடி வகுப்பினர், 37 வயது வரை விண்ணபிக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தபடுத்தப்பட்டோர் 34 வயது வரை விண்ணபிக்கலாம்.
ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் இணையதள http://hrce.tn.gov.in லிங்கில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, முழுமையாகக் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தகுதிகள்
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேணும்.
மேலும், இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 10-ன் படி இந்து மதத்தை பின்பற்றபவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 1 சம்பள விகிதம் அடிப்படையில் ரூ.15,700 முதல் அதிகபடியாக ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து ஆட்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்
https://hrce.tn.gov.in/
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1. சான்றொப்பமிட்ட கல்வித்தகுதிச் சான்றிதழ்களின் நகல்கள்,
2. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்க, கல்வியாளர்கள், மக்கள் பிரிதிநிதிகள் போன்ற எவரேனும் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
3. நேர்முகத் தேர்வில் உண்மைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. தற்போது பணியிலிருந்தால் அந்நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்று.
5. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் பதிவு எண் அடங்கிய சான்றின் நகல்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி. "ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 034" என்ற முகவரிக்கு வரும் 28.05.2025 மாலை 05.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/231/document_1.pdf
No comments:
Post a Comment