கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, May 22, 2023

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்தது. 

 பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். 

 ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. ஆகவே, பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்ற தகவல்கள் வெளிவந்தன. 

இந்த தகவல்களுக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 

 இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஸ், “ “ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழக முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். 

ஜூன் 1ம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை திறக்கப்படும். 

ஜூன் 5ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment