தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்களுக்கு ரூ.32,020 முதல் ரூ 96,210 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாநில ஆள்சேர்ப்பு நிலையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமையிடத்தில் உள்ள 50 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் https://tncoopsrb.in/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 14 முதல் தொடங்கி, டிசம்பர் 31-ம் தேதி வரை பெறப்படுகிறது. உதவியாளர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியின் விவரங்கள்
துறையின் பெயர்
கூட்டுறவுத் துறை
நிறுவனப் பெயர்
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி
பதவியின் பெயர்
உதவியாளர்
காலிப்பணியிடங்கள் :50
இணையதளம்
https://tncoopsrb.in/
அறிவிப்பு
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி உதவியாளர் 2025
காலிப்பணியிடங்களின் விவரங்கள்
உதவியாளர்- 50
சம்பள விவரம்
உதவியாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.32,020 என்பது அடிப்படை சம்பளமாகும். அந்த வகையில், ரூ.32,020 - 96,210 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
உதவியாளர் பதவிக்கு 01.07.2025 தேதியின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் உச்ச வயது வரம்பு 32 ஆகும். நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் வயது வரம்பு 42 ஆகவும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதாகவும் உள்ளன. ஆதரவற்ற பெண்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. மேலும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி என்ன?
உதவியாளர் பதவிக்கு அங்கீகரித்த கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (அல்லது) பொறியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல்/ தொழில்நுட்பம் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (அல்லது)
சட்டம் அல்லது வணிகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பெற்றிருக்கலாம் (அல்லது) சிவில், எலெக்ட்ரிக்கல் அல்லது இதற்கு இணையான பாடத்திட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கலாம்.
மேலும், விண்ணப்பதார்கள் கட்டாயம் கூட்டுறவு பயிற்சியை முடித்திருக்க வேண்டும் அல்லது பயிற்சியில் இருக்க வேண்டும். கணினி பயன்பாட்டை தெரிந்திருப்பது அவசியமாகும்.
அதிக வாய்ப்பு யாருக்கு?
கல்வித்தகுதி
பட்டப்படிப்பு -2
கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் -33
சட்டப் பட்டப்படிப்பு - 2
வணிக பட்டப்படிப்பு -9
சிவில்/ எலெக்ட்ரிக்கல்- 4
கூட்டுறவு பயிற்சி என்பது என்னென்ன?
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் கூட்டுறவு டிப்ளமோ.
சென்னை நடேஷன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் - உயர் கூட்டுறவு டிப்ளமோ.
யாருக்கெல்லாம் விலக்கு உண்டு?
பி.ஏ - கூட்டுறவு
பி.காம் - கூட்டுறவு
எம்.ஏ - கூட்டுறவு
எம்.காம் - கூட்டுறவு
பி.காம் (ஆனர்ஸ்) - கூட்டுறவு
அங்கீகரிக்கபப்ட்ட கூட்டுறவியல் முதுநிலை பட்டப்படிப்பு
வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
மேலும், விலக்கு கோருபவர்கள், கணக்குப்பதிவியல், வங்கியியல், கூட்டுறவு, தணிக்கை ஆகிய பாடங்களை படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படும். எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும்.
எழுத்துத் தேர்வு, பட்டப்படிப்பு தரத்தில் கொள்குறி வகையில் 3 மணி நேரம் நடைபெறும். 200 வினாக்காள் கொண்டு 170 மதிப்பெண்களுக்கு அமையும். நேர்முகத் தேர்வு 30 மதிப்பெண்களுக்கு அமையும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் அடுத்தக்கட்டத்திற்கு தகுதிப்பெறுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உரிய கல்வித்தகுதியை பெற்றவர்கள் https://tncoopsrb.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு 2026-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நடைபெறவுள்ளது.
முக்கிய நாட்கள்
இணையவழி விண்ணப்பம் தொடக்கம்
14.12.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்
31.12.2025
05.45 மணி வரை
எழுத்துத் தேர்வு
24.01.2026
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கி தலைமையிடத்தில் பணி செய்ய விரும்புகிறவர்கள் கடைசி தேதிக்குள் உரிய விவரங்களை அளித்து விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment