ஊராட்சி துறையில் 1,483 கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உங்கள் மாவட்டத்திலேயே கிராம ஊராட்சி செயலாளராக பணி வாய்ப்பைப் பெறலாம்.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,483 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 10-ம் தேதி முதல் தொடங்கி பெறப்படுகிறது. இதில் உங்கள் மாவட்டத்தில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன, அப்பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
கிராம ஊராட்சி செயலாளர்
வயது வரம்பு
18 முதல் அதிகபடியாக 37 வரை
மொத்த காலிப்பணியிடங்கள்
1,483
இனசுழற்சி
மாவட்ட வாரியாக நிரப்பப்படுகிறது
மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை
அரியலூர் -33
செங்கல்பட்டு- 52
கோயம்புத்தூர் -14
கடலூர்- 37
தர்மபுரி- 21
திண்டுக்கல்- 39
ஈரோடு -26
கள்ளக்குறிச்சி -33
காஞ்சிபுரம் -55
கன்னியாகுமரி -30
கரூர் -32
கிருஷ்ணகிரி -50
மதுரை-69
மயிலாடுதுறை -31
நாகப்பட்டினம் -18
நாமக்கல்- 33
பெரம்பலூர்- 16
புதுக்கோட்டை -83
ராமநாதபுரம்- 17
ராணிப்பேட்டை -31
சேலம்- 54
சிவகங்கை -51
தென்காசி- 36
தஞ்சாவூர்-91
தேனி -20
நீலகிரி -9
தூத்துக்குடி -32
திருச்சி -72
திருநெல்வேலி -24
திருப்பத்தூர் -24
திருப்பூர் -19
திருவள்ளூர் -88
திருவண்ணாமலை- 69
திருவாரூர் -38
வேலூர் -26
விழுப்புரம் -60
விருதுநகர்- 50
மொத்தம் -1,483
கிராம ஊராட்சி செயலாளர் தகுதிகள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் முறையாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ (CBSE), ஐசிஎஸ்இ (ICSE), மெட்ரீகுலேஷன் (Matriculation) ஆகிய வாரியங்களில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 8-ம் வகுப்பு வரையிலும் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். இது குறைந்தபட்ச தகுதியே ஆகும். முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்கள், தமிழ் மொழி பாடம் கொண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். பிரிவினருக்கு ஏற்ப வயது வரம்பு பின்பற்றப்படுகிறது. அதன்படி, அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு https://tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம். இந்த இணையதளத்தில் வழங்கியுள்ள விவரங்களின்படி, ஆன்லைன் விண்ணப்பில் எந்த மாவட்டத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு, முறையாக நிரப்பி விண்ணப்பிக்கலாம். கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்கு எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50 செலுத்த வேண்டும்.
அறிவிப்பை பார்க்க
https://www.tnrd.tn.gov.in/pdf/notification_ps.pdf
மேலும்
https://share.google/rTJ8GsGAzyDhCin5Z
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
வகுப்பு சான்றிதழ் (Community Certificate)
குடும்ப அட்டை எண் (Ration Card)
பிறப்பு சான்றிதழ்
விண்ணப்பதாரரின் புகைப்படம்
விண்ணப்பதாரரின் கையொப்பம்
நிபந்தனைகள்
ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கும் முன்பு விண்ணப்பதார்கள் அந்தந்த மாவட்டத்திற்கான காலிப்பணியிடங்கள் மற்றும் இன சுழற்சி விவரங்களை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணிக்கான தகுதி உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறைந்தபட்ச தகுதியை பூர்த்தி செய்யாதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
செலுத்தப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதார்கள் ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு ஒரே ஒரு இணைய ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை மட்டுமே சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உண்மையான சான்றிதழ்களை சமர்பிக்கப்பட வேண்டும். தவறான தகவல்கள் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இப்பணியிடங்களுக்கு மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment